உள்ளூர் செய்திகள்
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கரும்பு கட்டுகள்.

உடன்குடியில் பொங்கல் விற்பனை மும்முரம்

Published On 2022-01-12 10:52 GMT   |   Update On 2022-01-12 10:52 GMT
உடன்குடி பஜாரில் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
உடன்குடி:

தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள்  நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி உடன்குடி பஜார் பகுதியில் ஆங்காங்கே கரும்பு கட்டுகள் மற்றும் பனங்கிழங்குகள் குவிக்கப்பட்டு, விற்பனை தீவிரமாக நடக்கிறது.

15 எண்ணிக்கை கொண்ட கரும்புக்கட்டு ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைப்போல 25 எண்ணிக்கை உள்ள பனங்கிழங்கு கட்டு ஒன்று ரூ.100 முதல் ரூ.125 வரை  விற்பனை செய்யப்படுகிறது.  

அதேபோல காய்ந்த பனை ஒலை ஒன்று ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாழைகுலைகள், வாழை இலை, காய்கறிகள் என பஜார் பகுதி முழுவதும் ஆங்காங்கே குவிந்து உள்ளது.

நாளை மறுநாள் பொங்கல் என்பதால் உடன்குடியில்  வியாபாரம் களை கட்ட தொடங்கி விட்டது.
Tags:    

Similar News