செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 20-க்கும் குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனாபாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 347-ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 18 ஆயிரத்து 8 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 115 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பலன் இன்றி 224 பேர் பலியாகியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 20-க்கும் குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனாபாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 347-ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 18 ஆயிரத்து 8 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 115 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பலன் இன்றி 224 பேர் பலியாகியுள்ளனர்.