ஸ்லோகங்கள்
திருப்பதி பெருமாள்

திருப்பதி மலையேற்ற சுலோகம்

Published On 2022-02-07 09:02 GMT   |   Update On 2022-02-07 09:02 GMT
திருப்பதி ஏழுமலையானை கீழ் திருப்பதியில் இருந்து நடந்து மலையேறிச் சென்று தரிசிப்பவர்கள் செல்லும்போது சொல்ல வேண்டிய சுலோகம் ஒன்று உள்ளது. அதை இங்கே பார்க்கலாம்.
திருப்பதி ஏழுமலையானை கீழ் திருப்பதியில் இருந்து நடந்து மலையேறிச் சென்று தரிசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படிச் செல்லும்போது சொல்ல வேண்டிய சுலோகம் ஒன்று உள்ளது. அதை இங்கே பார்க்கலாம்.

ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸேவந்தே ஸ்ரத்தயாஸஹ
தம் பவந்தம் அஹம் பதத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
க்ஷமஸ்வ ததகம் மேசத்ய தயயா பாபசேதஸ:
த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்ஸயஸ்வமே.

பொருள்:-

பிரம்மதேவன் முதலான தேவர்கள், எந்த வேங்கட மலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்க மயமான, அளவு கடந்த புண்ணியம் உள்ளதும், சர்வ தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான, ஸ்ரீநிவாசனுக்கு இருப்பிடமான பர்வதமே.. என் கால்களால் தங்கள் மீது ஏறுகிறேன். அதனால் உண்டாகும் பாவங்களை கருணையினால் தாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். தங்களின் சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீவேங்கடவனை தாங்கள் எனக்குத் தரிசனம் செய்து வைக்க வேண்டும்.
Tags:    

Similar News