செய்திகள்
கொரோனா வைரஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

Published On 2021-07-19 13:10 GMT   |   Update On 2021-07-19 13:10 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 24 பேர் பாதிக்கப்பட்டனர். 57 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர், 45 வயது பெண் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி, சேலம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 24 பேர் பாதிக்கப்பட்டனர். 57 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 40 ஆயிரத்து 137 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 523 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 318 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News