செய்திகள்
புதிதாக சீரமைக்கப்பட்ட காதி கிராப்ட் விற்பனை மைய கட்டிடத்தை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.

சிவகங்கையில் புதிதாக சீரமைக்கப்பட்ட காதி கிராப்ட் விற்பனை மைய திறப்பு விழா

Published On 2020-08-09 11:02 GMT   |   Update On 2020-08-09 11:02 GMT
சிவகங்கையில் ரூ.15.60 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட காதி கிராப்ட் விற்பனை மைய கட்டிடத்தை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
சிவகங்கை:

சிவகங்கை காந்தி வீதியில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தின் காதி கிராப்ட் விற்பனை மையம் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன் சீரமைக்கப்பட்ட விற்பனை மையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 2 விற்பனை நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு ரூ.64.96 லட்சம் அளவுக்கு கதர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி அருகே கண்டனூரில் ஒரு நவீன திரவ சோப்பு அலகு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு திரவ ஷாம்பு, குளியல் நீர்மம் மற்றும் கை கழுவும் திரவம் உற்பத்தி செய்யப்படுகிறது. விரைவில் இங்கு கை சுத்திகரிப்பான் (சானிடைசர்), தரை கழுவும் திரவம் ஆகியவையும் தயாரிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரிய மண்டல துணை இயக்குனர் அருணாச்சலம், உதவி இயக்குனர்கள் குமார்(சிவகங்கை), பாரதி (மதுரை), துணை கலெக்டர் (பயிற்சி) கீர்த்தனா, கூட்டுறவு சங்க இயக்குனர் கருணாகரன், எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் கருணாகரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், கூட்டுறவு அச்சக சங்க தலைவர் சசிக்குமார், கூட்டுறவு விற்பனை பண்டக சாலை தலைவர் ஆனந்தன், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் ராஜா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராமசாமி, தாசில்தார் மைலாவதி, யூனியன் துணைத்தலைவர் கேசவன் மற்றும் செல்வமணி, கோபி சிவாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News