ஆன்மிகம்
உறையூர் வெக்காளியம்மன் கோவில்

உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா ரத்து

Published On 2021-04-12 07:51 GMT   |   Update On 2021-04-12 07:51 GMT
திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த ஆண்டு தேர்த்திருவிழா நடைபெறாது. பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி மற்றும் அக்னி சட்டி ஏந்தி வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த ஆண்டு தேர்த்திருவிழா நடைபெறாது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தமிழ் புத்தாண்டு தினத்தன்று பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி மற்றும் அக்னி சட்டி ஏந்தி வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News