செய்திகள்
கோப்புபடம்

தண்ணீர் கொண்டு வர வலியுறுத்தி வட்டமலை அணையில் 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றிய பொதுமக்கள்

Published On 2021-11-22 09:16 GMT   |   Update On 2021-11-22 09:16 GMT
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அணை பாசன விவசாயிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் அணையில் 10 ஆயிரத்து 8 விளக்குகளை ஏற்றினர்.
வெள்ளகோவில்:

வெள்ளக்கோவில் உத்தமபாளையத்தில் வட்டமலை அணை உள்ளது. போதிய நீராதாரம் இல்லாத இடத்தில் அணை கட்டப்பட்டதால் கடந்த 42 ஆண்டுகளில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே அணையிலிருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

அணைக்கு அருகிலுள்ள அமராவதி ஆற்றிலிருந்து உபரிநீர் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் இருந்து அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டுமென விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருந்தபோதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அணை பாசன விவசாயிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் அணையில் 10 ஆயிரத்து 8 விளக்குகளை ஏற்றினர்.
Tags:    

Similar News