செய்திகள்
ஆரணியில் பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆரணி:
ஆரணி முள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் திட்டியதால் கோவித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஆரணி நகர போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.