உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நாளை 2-வது வாரமாக முழு ஊரடங்கு: ஈரோட்டில் 1,500 போலீசார் கண்காணிப்பு

Published On 2022-01-15 09:10 GMT   |   Update On 2022-01-15 09:10 GMT
தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் ஒமைக்ரான் பாதிப்பும் சேர்ந்து அதிக அளவு பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் ஒமைக்ரான் பாதிப்பும் சேர்ந்து அதிக அளவு பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 6-ந் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு என அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாளை 2-வது வாரமாக மீண்டும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. 

இதன்படி நாளை அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் அத்தியாவசிய பொருட்களான பால், மருந்தகங்கள், ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 

அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழு ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News