ஆன்மிகம்
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் திரிசூல ஸ்நானம்

வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு: திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் திரிசூல ஸ்நானம்

Published On 2021-03-15 02:13 GMT   |   Update On 2021-03-15 02:13 GMT
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. விழாவின் 10-வது (நிறைவு) நாளான நேற்று கோவில் உள்ளேயே திரிசூல ஸ்நானம் நடந்தது.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. விழாவின் 10-வது (நிறைவு) நாளான நேற்று கோவில் உள்ளேயே திரிசூல ஸ்நானம் நடந்தது.

முன்னதாக கோவிலில் அதிகாலை நடராஜருக்கு ஆஸ்தானமும், பின்னர் கபிலேஸ்வரசாமி, காமாட்சி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. இதையடுத்து இரவு 8 மணியில் இருந்து 9 வரை ராவணாசூர வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கபிலேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
Tags:    

Similar News