செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

கர்நாடகாவில் அதிமுக மாநில செயலாளராக எஸ்.டி.குமார் நியமனம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

Published On 2021-03-06 09:42 GMT   |   Update On 2021-03-06 09:42 GMT
கர்நாடகாவில் அதிமுக மாநில கழக செயலாளராக எஸ்.டி. குமார் இன்று முதல் நியமிக்கப்படுவதாக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கர்நாடக மாநிலக் கழக இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.டி.குமார் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். கர்நாடக மாநில கழக செயலாளர் பொறுப்பில் எஸ்.டி. குமார் (ஜோன்ஸ் ரோடு, ருக்மணி காலனி, பெங்க ளூரு) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News