செய்திகள்
இரு குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
இந்தநிலையில் மகேஷ் குமார், இந்நகர் பஜார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர் பாத்திமா நகர் பூங்கா தெருவை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 32). புகைப்படத் தொழில் செய்து வரும் இவரது மனைவி திவ்யா (30). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ப்ரீத்தி (9), சஷ்டிகா ஸ்ரீ (5) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். திவ்யா அழகு நிலையம் நடத்தி வருகிறார். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் திவ்யா தனது குழந்தைகளுடன் இந்நகர் கே.கே.எஸ்.எஸ்.என் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச்சென்றுள்ளார். ஆனால் அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு செல்லவில்லை. இரவில் கணவர் வீட்டிற்கும் வரவில்லை.