செய்திகள்
முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் மற்றும் கடைகளில் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்த வியாபாரிகள் உள்ளிட்ட 16 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.3200 அபராதம் விதிக்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் பகுதியில் பேரூராட்சி செயல் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமரகுரு, சுகாதார மேற்பார்வையாளர்கள் நாடிமுத்து, நித்தியானந்தம், இளநிலை உதவியாளர் மருதமுத்து மற்றும் போலீசார் கொரோனா விழிப்புணர்வு பணியை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் மற்றும் கடைகளில் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்த வியாபாரிகள் உள்ளிட்ட 16 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.3200 அபராதம் விதித்தனர்.