செய்திகள்
தற்கொலை

கண்ணமங்கலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-05-08 15:04 GMT   |   Update On 2021-05-08 15:04 GMT
கண்ணமங்கலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ. அவரது மகன் சரவணன் (வயது 30), டிப்ளமோ படித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு காளசமுத்திரம் கிராமத்தில் உள்ள உறவினர் சேகர் என்பவரது வீட்டில் சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News