செய்திகள்
தற்கொலை (கோப்புப்படம்)

புதுவையில் தாய் திட்டியதால் எலி மருந்தை தின்று பள்ளி மாணவி தற்கொலை

Published On 2019-12-04 10:39 GMT   |   Update On 2019-12-04 10:39 GMT
புதுவையில் தாய் திட்டியதால் பள்ளி மாணவி எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:

புதுவை சண்முகாபுரம் சொக்கநாதன் பேட்டை தெற்கு அணை கரை வீதியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவருடைய கணவர் இறந்து விட்டார். இவருக்கு மோனிஷா (வயது 17), சுதர்சனா (16) என்ற மகளும், நாகராஜ் (13) என்ற மகனும் உள்ளனர்.

இவருடைய மூத்த மகள் மோனிஷா புதுவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த 28-ந்தேதி வீட்டு வேலை செய்ய சொல்லி மோனிஷாவை அவரது தாய் தனலட்சுமி திட்டி உள்ளார்.

இதில், மனமுடைந்த மோனிஷா வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பின்னர் மோனிஷாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு வீட்டிலேயே இருந்து விட்டனர்.

பின்னர் மறுநாள் காலை மோனிஷாவுக்கு மறுபடியும் உடல்நலம் சரி இல்லாமல் போனது. உடனே மோனிஷாவை அரியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திடீரென மோனிஷா பரிதாபமாக இறந்து போனார்.

பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News