ஆன்மிகம்
திருப்பதி பவித்ரோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவு

Published On 2021-08-21 05:53 GMT   |   Update On 2021-08-21 05:53 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை அர்ச்சகர்கள் ஹோம பூஜையை நடத்தினர். காலை 9 மணியில் இருந்து பகல் 11.00 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம், சந்தனத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் யாகசாலையில் மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரை பவித்ர பூர்ணாஹூதியோடு வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைந்தது.

உற்சவத்தில் பெரியஜீயர்சுவாமி, சின்னஜீயர்சுவாமி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News