செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

ரஜினி-கமல் இணைந்தால் கவலை இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

Published On 2019-11-20 09:55 GMT   |   Update On 2019-11-20 14:04 GMT
அதிமுகவின் அடித்தளம் மிகவும் வலுவாக இருக்கிறது. ரஜினி-கமல் இணைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை:

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மேயர் பதவி தேர்தல் மறைமுகமாக நடத்தப்படுவது குறித்து எந்த திட்டமும் இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் ஊடகங்களுக்கு முதலில் தெரியப்படுத்துவோம்.



ரஜினி-கமல் ஒன்றாக சேரட்டும். அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட தொண்டர்களின் மிகப்பெரிய கோட்டை.

அ.தி.மு.க.வின் அடித்தளம் மிகவும் வலுவாக இருக்கிறது. யார் இணைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News