ஆன்மிகம்
பண்ணாரி அம்மன் கோவில்

பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா 15-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-03-03 06:06 GMT   |   Update On 2021-03-03 06:06 GMT
பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் விஷேச நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கோவிலில் குண்டம் விழா நடைபெறும். இது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் கூடுவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.

இந்தநிலையில் இந்த ஆண்டு குண்டம் விழாவுக்காக வருகிற 15-ந் தேதி பூச்சாட்டப்படுகிறது. அன்று முதல் பண்ணாரி அம்மன் சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களுக்கு சருகு மாரியம்மனுடன் திருவீதி உலா செல்வார்.

முக்கிய விழாவான குண்டம் விழா வருகிற 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

அடுத்த மாதம் 1-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 2-ம் தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

5-ந் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News