உள்ளூர் செய்திகள்
வகுப்பறைகள் திறப்பு

வகுப்பறைகள் திறப்பு

Published On 2022-05-06 10:17 GMT   |   Update On 2022-05-06 10:17 GMT
பள்ளி வகுப்பறைகள் காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்டது.
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலம் ரூ. 29.64 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

அப்போது தலைமையாசிரியர் மதிவாணன் குத்துவிளக்கேற்றி கட்டிடத்தை திறந்து வைத்தார்.  

இதேபோன்று வார்டு கவுன்சிலர் நேரு மற்றும் ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டு தமிழக முதல்வர் காணொளிகாட்சி மூலம் கட்டிடத்தை திறந்த பொழுது அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் கண்டுகளித்து கைதட்டி வரவேற்றனர். 

சுமார் 800 மாணவர்களைக் கொண்ட மாவட்டத்திலேயே சிறந்து விளங்கும் இந்த பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிதவித்து வந்த நிலையில், இந்த கட்டிடம் கொடுத்துள்ளது ஆறுதலாக உள்ளதாக புதுப்பட்டி கிராம மக்கள் கூறினர்.
Tags:    

Similar News