செய்திகள்
மதுரையில் செல்போன் கடை மேற்கூரையை உடைத்து கொள்ளை
மதுரையில் செல்போன் கடை மேற்கூரையை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கருப்பாயூரணி பாரதிபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சதக்கத்துல்லா (வயது 36). இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார்.
சம்பவத்தன்று நள்ளிரவு இவர் கடையை மூடிவிட்டு சென்றார். மர்ம நபர்கள் மேற்கூரையை உடைத்து கடைக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.57 ஆயிரத்து 490 ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பினர்.
சதக்கத்துல்லா அடுத்த நாள் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பணம் திருடுபோனது தெரிய வந்தது.
இதுகுறித்து சதக்கத் துல்லா அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.