செய்திகள்
பென் ஸ்டோக்ஸ்

நியூசிலாந்தில் இருந்து புறப்பட்டார் பென் ஸ்டோக்ஸ்: மகிழ்ச்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்கள்

Published On 2020-10-03 10:13 GMT   |   Update On 2020-10-03 10:13 GMT
இங்கிலாந்தின் சிறந்த ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விரைவில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவரது தந்தை நியூசிலாந்தில் உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.

நியூசிலாந்து சென்றுள்ள பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடர் தொடங்கியபோது ஐக்கிய அரபு அமீரகம் திரும்பவில்லை. இதனால் முதல்பாதி தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் தெரிவிக்கப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அவரைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை.

அந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் ஷேன் வார்னே ‘‘எப்படியும் இந்த வருட ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மிகப்பெரிய இழப்பு. எங்களுடைய நினைப்பு அவருடன் இருக்கிறது. பென் ஸ்டோன்ஸ் அணியில் இருந்தால் மிகவும் வலுவான அணியாக தோன்றும்’’ என்றார்.

இந்நிலையில் நியூசிலாந்தில் இருந்து பென் ஸ்டோக்ஸ் புறப்பட்டுவிட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தெரிவித்துள்ளது. இன்று அல்லது நாளை ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைவார். ஒரு வார கோரன்டைனுக்குப்பின்  அணியில் இணைவார்.

பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்புவது உறுதியாகிவிட்டதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Tags:    

Similar News