செய்திகள்
இந்த ஆண்டில் எல்லையில் 4 ஆயிரம் முறை அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
புதுடெல்லி:
போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4 ஆயிரத்து 52 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
நவம்பர் மாதத்தில் மட்டும் 128 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு 3,233 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது.