செய்திகள்
வல்லம் அருகே வேன் மோதி பாலிடெக்னிக் மாணவர்கள் 3 பேர் படுகாயம்
வல்லம் அருகே வேன் மோதி பாலிடெக்னிக் மாணவர்கள் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள முதுகுளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் வீரமணி (வயது19). தஞ்சை அருகே உள்ள மானோஜிபட்டியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் மகன் ராகுல்குமார்(19), தஞ்சை அருகே உள்ள விளார் ரோடு நேதாஜி நகரை சேர்ந்தவர் வாசு மகன் விஷால்(19).
இவர்கள் மூவரும் செங்கிப்பட்டி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து மாணவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தஞ்சை-திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
வல்லத்தை அடுத்த திருமலை சமுத்திரம் அருகே வந்தபோது வேன் மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சை அருகே உள்ள முதுகுளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் வீரமணி (வயது19). தஞ்சை அருகே உள்ள மானோஜிபட்டியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் மகன் ராகுல்குமார்(19), தஞ்சை அருகே உள்ள விளார் ரோடு நேதாஜி நகரை சேர்ந்தவர் வாசு மகன் விஷால்(19).
இவர்கள் மூவரும் செங்கிப்பட்டி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து மாணவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தஞ்சை-திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
வல்லத்தை அடுத்த திருமலை சமுத்திரம் அருகே வந்தபோது வேன் மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.