செய்திகள்
விழுப்புரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு
விழுப்புரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
விழுப்புரம்:
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தனுசு மகன் கந்தன் (வயது 30). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கந்தன், அவரது மனைவி சுகன்யா(27), மகன் சுதன் (1) மற்றும் தனுசு ஆகியோர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனுசு, வீட்டின் முன்பக்க கதவை திறந்து வெளியே சென்றுள்ளார். அந்த சமயத்தில் யாரோ மர்ம நபர், வீட்டிற்குள் நுழைந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த சுகன்யாவின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.