உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் சிவன் ஆலயங்களில் தாராபிேஷகம் வழிபாடு

Published On 2022-05-07 06:46 GMT   |   Update On 2022-05-07 06:46 GMT
லிங்கத்தின் மீது சொட்டு சொட்டாக தீர்த்தம் விழும் வகையில் தாராபாத்திரம் அமைக்கப்படும்.
 திருப்பூர்:

அக்னி நட்சத்திரம் கத்திரி வெயில் துவங்கும் போது வெப்ப நிலை அதிகரிக்கிறது. சிவாலயங்களில் ஆவுடையாரை குளிர்விக்கும் வகையில் லிங்கத்தின் மீது தாரா பாத்திரம் பொருத்தப்படுகிறது. செம்பில் செய்த தாராபாத்திரத்தினுள் வெட்டிவேர் மற்றும் மூலிகை பொடிகள் கலந்து தண்ணீர் ஊற்றி வைக்கப்படும்.

லிங்கத்தின் மீது சொட்டு சொட்டாக தீர்த்தம் விழும் வகையில் தாராபாத்திரம் அமைக்கப்படும். இதன்மூலமாக கோடை வெப்பத்தில் இருந்து சிவலிங்கம் குளிர்விக்கப்படுகிறது. திருப்பூர் பகுதியில் உள்ள அனைத்து சிவன் ஆலயங்களிலும் தாராபாத்திரம் பொருத்தி, தாராபிேஷகம் தொடங்கி உள்ளது.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஊத்துக்குளி ரோடு காசிவிஸ்வநாதர் கோவில், நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உட்பட அனைத்து சிவன் ஆலயங்களிலும் தாராபிேஷகம் தொடங்கி உள்ளது.  
Tags:    

Similar News