செய்திகள்
திருவண்ணாமலை கோவில்

கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: திருவண்ணாமலை கோவில் உண்டியல் வசூல் பாதியாக குறைந்தது

Published On 2021-04-29 05:58 GMT   |   Update On 2021-04-29 05:58 GMT
இரவுநேர ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமை முழுநேர ஊரடங்கு காரணமாகவும், கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டதாலும் கோவிலில் உண்டியல் வசூல் மிகவும் குறைந்து விட்டது.
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் 14 கி.மீ. தூரம் நடந்து கிரிவலம் சென்று வழிபடுவார்கள்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவியதால் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 26-ந்தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் இரவுநேர ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமை முழுநேர ஊரடங்கு காரணமாகவும், கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டதாலும் கோவிலில் உண்டியல் வசூல் மிகவும் குறைந்து விட்டது.

கடந்த சில மாதங்களாக சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வசூல் ரூ.1 கோடி வரை கிடைத்து வந்தது.

சித்ரா பவுர்ணமி முடிந்து நேற்று கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது.

இதில் தன்னார்வ ஊழியர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ரூ.38,28,292 லட்சம் ரொக்கம், 170 கிராம் தங்கம், 713 கிராம் வெள்ளி ஆகியவை இருப்பது தெரியவந்தது.

கடந்த மாதங்களை விட இந்த மாதம் உண்டியல் வசூல் பாதியாக குறைந்துள்ளது. இதற்கு கொரோனா கட்டுப்பாடுகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News