உள்ளூர் செய்திகள்
தெற்கு ரெயில்வே

41 ரெயில்களில் 2 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு

Published On 2021-12-31 08:52 GMT   |   Update On 2021-12-31 08:52 GMT
கோயம்புத்தூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தலா 2 பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக 1-ந்தேதி முதல் பயன்பாட்டில் வருகிறது.
நாகர்கோவில்:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கும் முறை ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் அந்த பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாகவும் இருந்தது. இந்த நிலையில் ரெயில்களில் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளை பயன்பாட்டில் கொண்டு வர ரெயில்வே முன் வந்துள்ளது.

39 ரெயில்களில் நாளை (1-ந்தேதி) முதலும், பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4-ந்தேதி முதலும் என்று மொத்தம் 41 ரெயில்களில் இது பயன்பாட்டிற்கு வருகிறது. அந்த வகையில் திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி ரெயில்களில் தலா 2 பெட்டிகள் நாளை முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக பயன்பாட்டில் இருக்கும்.



மங்களூர்-நாகர்கோவில், நாகர்கோவில்-மங்களூர் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4-ந்தேதி முதல் 2 பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இருக்கும். மங்களூர் சென்ட்ரல்- நாகர்கோவில், நாகர்கோவில்- மங்களூர் சென்ட்ரல் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தலா 2 பெட்டிகளும், நாகர்கோவில்-கோட்டயம் பயணிகள் ரெயிலில் 2 பெட்டிகளும், நாகர்கோவில்- கோயம்புத்தூர், கோயம்புத்தூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தலா 2 பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக 1-ந்தேதி முதல் பயன்பாட்டில் வருகிறது.

Tags:    

Similar News