செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

திருக்குறுங்குடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

Published On 2020-01-16 16:55 GMT   |   Update On 2020-01-16 17:39 GMT
திருக்குறுங்குடி அருகே மிக்சியில் சட்னி அரைத்து கொண்டிருந்த பெண்ணை மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி நம்பி தலைவன் பட்டயத்தை சேர்ந்தவர் சுசிகர்ராஜ் (வயது 55). இவர் சூரங்குடியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் (50). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலை மாரியம்மாள் வீட்டில் மிக்சியில் சட்னி அரைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் அலறியபடியே மயங்கி விழுந்தார்.

இதைக்கேட்டு வந்த உறவினர்கள் அவரை மீட்டு வள்ளியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News