செய்திகள்
நகை பறிப்பு

வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த மூதாட்டியிடம் 8½ பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2020-11-21 10:29 GMT   |   Update On 2020-11-21 10:29 GMT
தேனி அருகே வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த மூதாட்டியிடம் 8½ பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:

தேனி அருகே உள்ள டொம்புச்சேரியை சேர்ந்த பேயத்தேவர் மனைவி அன்னக்கொடி (வயது 74). இவர் நேற்று பகல் 12 மணியளவில் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து அன்னக்கொடியிடம் அவருடைய மகனை பற்றி விசாரித்தபடி பேச்சுக் கொடுத்தார். இந்தநிலையில் அந்த வாலிபர், திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 8½ பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு சிறிது தொலைவில் மற்றொரு வாலிபர் தயார் நிலையில் வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அன்னக்கொடி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News