செய்திகள்
காங்கோ பஸ் விபத்து

காங்கோவில் பஸ் விபத்து: 20 பேர் பலி

Published On 2019-10-20 11:04 GMT   |   Update On 2019-10-20 11:04 GMT
ஜனநாயக குடியரசு காங்கோ நாட்டில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 20 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜனநாயக குடியரசு காங்கோ நாட்டில் இன்று காலை லுஃபு என்ற இடத்தில் இருந்து தலைநகர் கின்ஷானாவுக்கு ஒரு பஸ் பயணிகள் மற்றும் சரக்குகளுடன் சென்று கொண்ருந்தது. பன்ஜா-குங்கு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் அந்த பஸ் வந்து கொண்டிருக்கும்போது திடீரென பிரேக் பழுதானது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தலைகீழாக கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த ஒருவர் கூறுகையில் ‘‘பஸ்சில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் தீப்பிடித்து எரிந்ததில் மேலும் சிலர் இறந்திருக்கிலாம்’’ எனத் தெரிவித்தார்.

தலைநகர் கின்ஷானாவில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள பன்ஜா-குங்கு பகுதியில் அடிக்கடி பஸ் விபத்து ஏற்படுவது வழக்கமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.
Tags:    

Similar News