உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு

Published On 2021-12-09 06:34 GMT   |   Update On 2021-12-09 06:34 GMT
பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு அளிக்கப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு அளிக்கப்படுகிறது.

அவ்வாறான போலீசாரை ஊக்குவிக்கும் வகையில் அவரின் போட்டோவுடன் பதவி, பணியாற்றும் இடம் மற்றும் பணியாற்றிய வழக்கு விவரங்களை குறிப்பிட்டு, பேனர் அச்சிட்டு மக்கள் பார்வைக்கு வைக்க எஸ்.பி., சஷாங் சாய் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கடந்த மாதம் சிறந்த முறையில் பணியாற்றியதாக இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் (தாராபுரம்), ராஜேஸ்வரி (உடுமலை மகளிர் போலீஸ் நிலையம்), ஞானவேல் (தாராபுரம் போக்குவரத்து), எஸ்.ஐ., தவசியப்பன் (பெருமாநல்லூர்) மற்றும் அவிநாசி போலீஸ் நிலையத்தை சேர்ந்த, சிறப்பாக பணிபுரிந்த குற்ற தடுப்பு குழுவினர் எஸ்.ஐ., பார்த்திபன், ஹரிராஜ், ராஜா, வேணுகோபால் ஆகியோரின் புகைப்படம் மற்றும் குறிப்பு அச்சிட்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News