ஆன்மிகம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது

Published On 2021-10-21 05:48 GMT   |   Update On 2021-10-21 05:48 GMT
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. வசதியான நாளில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நாள் முடிவு செய்யப்படும்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. கோட்டயத்தைச் சேர்ந்த வாசுதேவன் பட்டத்திரி தலைமையில் நடக்கும் பூஜைகளைத் தொடர்ந்து தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு, செய்ய வேண்டிய பரிகார பூஜைகள் குறித்து முதலில் திட்டமிடப்படுகிறது.

பின்னர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக 3 நாட்கள் தேர்வு செய்யப்படும். பின்னர் அரசுக்கு வசதியான நாளில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நாள் முடிவு செய்யப்படும்.
Tags:    

Similar News