ஆன்மிகம்
ஆனி மாத கார்த்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகக் கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆனி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு ஆறுமுகக் கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு, தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. வாய்மேடு பழனிஆண்டவர் கோவிலில் ஆனி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், திருநீறு, ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்று. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு, தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. வாய்மேடு பழனிஆண்டவர் கோவிலில் ஆனி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், திருநீறு, ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்று. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.