செய்திகள்
கோப்புபடம்

அவினாசியில் கடையை உடைத்து கொள்ளை

Published On 2021-10-11 09:38 GMT   |   Update On 2021-10-11 09:38 GMT
கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், பீடி பண்டல்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ .1000 ஆகியவற்றை காணவில்லை.
அவினாசி:

அவினாசியை அடுத்து கருவலூர் மெயின் ரோட்டில் பெட்டி கடை நடத்தி வருபவர் தங்கவேல் ( வயது 45). இவர் நேற்று முன்தினம் இரவு தனது கடையை பூட்டிவிட்டு சென்றார். 

பின்னர் காலையில் கடைக்கு சென்று பார்த்த போது கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், பீடி பண்டல்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ .1000 ஆகியவற்றை காணவில்லை. எனவே இரவு கடையை பூட்டி விட்டு சென்றதும் மர்ம நபர்கள் கடையை உடைத்து பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. 

இதுகுறித்து அவினாசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி  வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News