செய்திகள்
வாலாஜாபாத் அருகே உறவினர் வீட்டில் தங்கி இருந்த சிறுமி கற்பழிப்பு
பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த பொன்னியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்:
திருக்கழுக்குன்றம் தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுமி வாலாஜாபாத் பகுதியில் உள்ள டெய்லரிங் பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.
இதற்காக அவர் கடந்த பிப்ரவரி மாதம் வாலாஜாபாத் அடுத்துள்ள சங்கராபுரத்தில் உள்ள தனது அக்காள் முறையான பெரியப்பா மகள் பொன்னி என்பவரது வீட்டில் வந்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி பொன்னியின் கணவர் மோகன் (30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு சிறுமியின் அக்காள் பொன்னியும் உடந்தையாக இருந்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாயார் சாலவாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த பொன்னியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மோகனை தேடி வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம் தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுமி வாலாஜாபாத் பகுதியில் உள்ள டெய்லரிங் பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.
இதற்காக அவர் கடந்த பிப்ரவரி மாதம் வாலாஜாபாத் அடுத்துள்ள சங்கராபுரத்தில் உள்ள தனது அக்காள் முறையான பெரியப்பா மகள் பொன்னி என்பவரது வீட்டில் வந்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி பொன்னியின் கணவர் மோகன் (30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு சிறுமியின் அக்காள் பொன்னியும் உடந்தையாக இருந்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாயார் சாலவாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த பொன்னியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மோகனை தேடி வருகின்றனர்.