செய்திகள்
கோப்புப்படம்

சிதம்பரம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-06-15 17:35 GMT   |   Update On 2021-06-15 17:35 GMT
உடல் எடையை குறைத்ததால் மனஅழுத்தம் காரணமாக 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம்:

சிதம்பரம் அண்ணாமலை நகர் பழைய பண்டிட் குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரீத்திகிருஷ்ணா (வயது 15). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். உடல் எடை அதிகமாக இருந்த பிரீத்தி கிருஷ்ணா மருத்துவரின் ஆலோசனையை கேட்டு உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அதைத்தொடர்ந்து மாணவி உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறிவிட்டார்.

இதனால் மனஅழுத்தத்தில் இருந்த மாணவி பிரீத்திகிருஷ்ணா சம்பவத்தன்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags:    

Similar News