செய்திகள்
இளம்பெண் மாயம்

கோவையில் 2 மகன்களுடன் இளம்பெண் மாயம்

Published On 2021-08-04 10:15 GMT   |   Update On 2021-08-04 10:15 GMT
கோவையில் 2 மகன்களுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை:

கோவை வேலாண்டிபாளையம் அருகே உள்ள கந்தசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் அழகேசன். தங்க நகை தொழிலாளி. இவரது மனைவி கமலாதேவி (வயது 28). இவர்களுக்கு தருண்குமார் (8), விஸ்வா (6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று அழகேசன் வழக்கம் போல வேலைக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இது குறித்து அழகேசன் வீட்டு உரிமையாளரிடம் தனது மனைவி மற்றும் மகன்கள் குறித்து கேட்டார். அதற்கு அவர் 2 குழந்தைகளுடன் கடைக்கு சென்றதாக கூறினார். இதனையடுத்து அழகேசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.

பின்னர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன்களுடன் மாயமான கமலாதேவியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News