வழிபாடு
கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோவிலில் கேது பகவானுக்கு சிறப்பு வழிபாடு

கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோவிலில் கேது பகவானுக்கு சிறப்பு வழிபாடு

Published On 2022-01-27 07:59 GMT   |   Update On 2022-01-27 07:59 GMT
கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோவிலில் கேது பகவானுக்கு பால், வாசனை திரவியங்கள், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. கேது பகவானுக்கு ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று கேது பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு ஹோமம் நடந்தது. இதனைத்தொடர்ந்து கேது பகவானுக்கு பால், வாசனை திரவியங்கள், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். . இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன் செய்திருந்தார்.
Tags:    

Similar News