செய்திகள்
எம்எஸ் டோனி

தென்ஆப்பிரிக்கா தொடரிலும் ரிஷப் பந்திற்குதான் வாய்ப்பு: எம்எஸ் டோனியின் நிலை?

Published On 2019-08-28 11:36 GMT   |   Update On 2019-08-28 11:36 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரை 3-0 என வீழ்த்திய அதே அணியை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் களம் இறக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த பின், வெஸ்ட் இண்டீஸில் தொடரில் இருந்து விலகிய டோனி ராணுவத்தில் இணைந்து பணி புரிந்தார். தற்போது ராணுவத்தில் இருந்து திரும்பியுள்ளார்.

டோனி இல்லாத நேரத்தில் எம்எஸ் டோனிக்குப் பதிலாக ரிஷப் பந்த் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியது. இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரின்போதும் ரிஷப் பந்தையே தேர்வு செய்ய தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.



இதனால் டோனி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமே. கடுமையான விமர்சனத்திற்கு இடையிலும் டோனி ஓய்வு முடிவை அறிவிக்காமல் இருந்து வருகிறார்.
Tags:    

Similar News