ஆன்மிகம்
முருகன் வள்ளி தெய்வானையுடன்

வேதாரண்யம் பகுதி முருகன் கோவில்களில் கார்த்திகை வழிபாடு

Published On 2021-06-10 07:04 GMT   |   Update On 2021-06-10 07:04 GMT
கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அருள்பாலித்து வரும் வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுக கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அருள்பாலித்து வரும் வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து விபூதி அலங்காரத்தில் அமிர்தகர சுப்பிரமணிய சுவாமி அருள்பாலித்தார்.

இதேபோல் தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவில், வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள முருகன் சன்னதிகளிலும் கார்த்திகை வழிபாடு நடந்தது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி இதில் பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
Tags:    

Similar News