ஆன்மிகம்
கன்னியாகுமரியில் பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம் அணிவித்து பக்தர்கள் இல்லாமல் சிறப்பு வழிபாடு
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லாததால், இந்த நிகழ்ச்சிகள் பக்தர்கள் இன்றி நடந்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, நிவேத்திய பூஜை, உஷ பூஜை, உஷ தீபாராதனை தொடர்ந்து 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணை, பால், தயிர், இளநீர், சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், 11 மணிக்கு அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காணிக்கையாக வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைரக்கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8 மணிக்கு அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை பவனியாக எடுத்து வந்தனர்.
அதன்பிறகு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடந்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லாததால், இந்த நிகழ்ச்சிகள் பக்தர்கள் இன்றி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் செய்திருந்தார்.
தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8 மணிக்கு அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை பவனியாக எடுத்து வந்தனர்.
அதன்பிறகு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடந்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லாததால், இந்த நிகழ்ச்சிகள் பக்தர்கள் இன்றி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் செய்திருந்தார்.