உள்ளூர் செய்திகள்
சொத்துவரி உயர்வு

சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2022-04-16 10:05 GMT   |   Update On 2022-04-16 10:05 GMT
வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள பேரூராட்சி கூட்டங்களில் சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வத்திராயிருப்பு

வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி பேரூராட்சியின் சிறப்புகூட்டம் பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சிவ அருணாச்சலம் முன்னிலை வகித்தார். பேரூராட்சியில் சொத்துவரி, சீராய்வு தொடர்பான அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி சிறப்புகூட்டம் பேரூராட்சித்தலைவர் ஜோதிலட்சுமி தலைமையில் துணைத்தலைவர் தனபாக்கியலட்சுமி, செயல்அலுவலர் இருதயராஜ் முன்னிலையில் நடைபெற்றது. பேரூராட்சியில் சொத்துவரி, காலிமனை வரிஉயர்வு செய்து பொதுசீராய்வு மேற்கொள்ள மன்றத்தில் அனுமதி பெறப்பட்டது. 

இதேபோல் சுந்தர பாண்டியம் பேரூராட்சி சிறப்புக்கூட்டம் பேரூராட்சித்தலைவர் ராஜம்மாள் தலைமையில் துணைத்தலைவர் இந்துஜா, செயல் அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்றது. பேரூராட்சியில் சொத்து வரிசீராய்வு தொடர்பாக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News