ஆன்மிகம்
சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில்

வருகிற 4-ந்தேதி சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-01-30 09:07 GMT   |   Update On 2021-01-30 09:07 GMT
கடலூர் அருகே சிங்கிரிகுடி லட்சுமிநரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 1-ந்தேதி முதல் யாகசலை பூஜைகள் தொடங்குகிறது.
கடலூர் அருகே சிங்கிரிகுடி லட்சுமிநரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 1ந்தேதி முதல் யாகசலை பூஜைகள் தொடங்குகிறது. இந்த விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்துவது குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு தாசில்தார் பலராமன் தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்பு துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கும்பாபிஷேக விழாவின் போது பொதுமக்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், துறை சார்ந்த அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.
Tags:    

Similar News