ஆன்மிகம்
கொரோனாவால் சரிந்த தொழில் வளர்ச்சி பெறுவதற்கான மந்திரம்

கொரோனாவால் சரிந்த தொழில் வளர்ச்சி பெறுவதற்கான மந்திரம்

Published On 2021-11-02 04:13 GMT   |   Update On 2021-11-02 04:13 GMT
சரிந்த தொழில் மற்றும் வியாபாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல, இதுவரை இல்லாத லாபம் காண இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யலாம்.
இன்று உலகமே பெருந்தொற்றுக்கு உள்ளாகி தள்ளாடிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக தொழில்துறையின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. கொரோனா பொது முடக்கங்கள் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்து, தொழில்நிறுவனங்களின் கதவுகள் மெல்ல திறக்கப்பட்டு வருகிறது. அரசும் இவர்களுக்கு அனைத்து வகையிலும் கை கொடுத்து வருகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும், தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் லாபம் காண போராடி கொண்டிருக்கின்றனர். கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்த வியாபாரம் கூட தற்போது கொரோனாவுக்கு பின்னர் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எந்த தொழிலும் லாபம் காண்பது அரிதாகி போனது. எந்த தொழில் செய்தாலும் முதலுக்கே மோசம் என்ற நிலை தான் உள்ளது.

அன்றாட கூலிக்கே திண்டாட்டம் என்ற புலம்பல் ஆங்காங்கே ஒலித்த வண்ணம் இருக்கிறது. எப்போதும் மனிதன் தனக்கான பிரச்சினை எழும் போது தான் இறைவனின் திசை, அவனது கண்களுக்கு புலப்படும்.

சரிந்த தொழில் மற்றும் வியாபாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல, இதுவரை இல்லாத லாபம் காண இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யலாம். அதீத சக்தி வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேய பரிகாரம் இது. ஒரு நம்பிக்கை மற்றும் முயற்சியின் கீழ் இதை செய்து பயன்பெற முயற்சிக்கலாம்.

விளக்கேற்றி வழிபாடு

தொழில், வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி வந்தால் தொழில் மற்றும் வியாபாரம் விருத்தி ஏற்படும். மேலும் பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால், வெற்றிலை, பாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

விளக்கேற்றி "ஓம் ஸ்ரீம் மஹாலட்சுமி தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள்பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும் என்று வேண்டி தீபத்தை வணங்கி தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும். தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை நெற்றியில் இட்டுக் கொள்ளவும்.இது உயர்வான பலன்களைத் தரும். மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.

‘ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ’ இம்மந்திரம் கடை மற்றும் வியாபார தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும். தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும் என்பது ஐதீகமாக உள்ளது. எனவே இதையும் ஒரு முயற்சியாக மேற்கொண்டு தொழிலில் வெற்றிபெறலாம்.
Tags:    

Similar News