செய்திகள்
கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள காட்டு பகுதியில் கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சதீஷ்குமார் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சாவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.