ஆன்மிகம்
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்

Published On 2019-11-19 01:35 GMT   |   Update On 2019-11-19 01:35 GMT
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 43-ம் திருப்பதியாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 43-ம் திருப்பதியாகும். புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள் ளது. முத்தரையர்களால் கட் டப்பட்ட குடவரைக் கோவில். திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோவில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்த கோவிலும் ஒன்று. இத்தலத்தில் சத்தியமூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர்.

திருமயத்தின் விஷ்ணு கோவிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலை விட மிகவும் பழ மையானது. இதன் காரணமாக இதற்கு ‘ஆதிரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக கூறப் படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம். இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

திருமயம் கோவில் மலைச்சரிவில் ஒரே கல்லினால் அமைந்த அதிசயிக்கத்தக்க கோவிலா கும். இங்கு ஒரே ஒரு சுற்றுச் சுவர் மட்டும் உள்ளதால் கோவிலை தனியே திருச்சுற்று சுற்றி வரமுடியாது. சதுர் யுகம் என்பது ஒரு யுகம் முடிந்து மறு யுகம் பிறக்கும் காலச் சக்கரத்தைக் குறிக்கும் அளவு. இந்த அளவின்படி ஸ்ரீரங்கத்து பெருமாள் 64 சதுர்யுகங்களுக்கு முன்னால் தோன்றினார். ஆனால் திருமயம் சத்யகிரிநாதன் 96 சதுர் யுகங்களுக்கு முன்னரே தோன்றியவர் என்பதால், திருமயம் கோவில் ஆதிரங்கம் என வழிபடப்படுகிறது.

இங்கு சோமச்சந்திர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும், மற் றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக் கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்திய மாக துணை நிற்பேன் என்று இத்தல இறைவன் வாக்குறுதி தந்ததால் இவருக்கு சத்திய மூர்த்தி’ என்ற திருப்பெயர் வந்தது.இக்குடவரைக் கோவிலின் மூலவர் யோக சயன மூர்த்தியான திருமெய்யர் உருவம் ஸ்ரீரங்கத்தை விட மிகப்பெரிய உருவம் தாங்கிய வர். திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உரு வம் இந்தியாவிலேயே மிகப் பெரியது.

சுற்றிலும் தேவர் கள், ரிஷிகள், பெருமாளின் நாடிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும், மார்பில் குடி யிருக்கும் மகாலட்சுமியும் எழுந்தருளியுள்ளார்கள். மூலவரான பெருமாளுக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தைலக்காப்பு இடப்படுகிறது. ‘மது’ ‘கைடபர்’ என்னும் இரு அசுரர்களிடமிருந்து பூமி தேவியையும், தேவர்கள், கின் னரர்களையும் காப்பாற்றி அருள்கிறார் என்கிறது தல வரலாறு.

இத்தலத்தின் தாயார் உஜ்ஜீ வனத்தாயார் (ஸ்ரீஉய்ய வந்த நாச்சியார்) எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார். இத்தாயாரை வழிபட்டால் குழந்தைப்பேறு நிச்சயம். பேய், பிசாசு பிடித்தவர்கள், நரம்புத் தளர்ச்சி நோயில் துன்புறு பவர்கள் நன்மை பெறுவர் என்பது நம்பிக்கை. மேலும் மனநிலை பாதிப்புகளுக்கு உடன டியாக பலனளிக்கும் பரிகாரத்தலம். இவர் படி தாண்டா பத்தினி என்பதால், வீதிஉலா வருவது இல்லை. கோவிலுக்கு சென்றால் மட்டுமே இவரை தரிசனம் செய்ய முடியும்.

பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம், மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர். இதற்கு அஞ்சிய தேவியர் இருவரும் ஒளிந்து கொள்ளலாயினர். பெருமாளின் திருவடிக்கரு கில் பூதேவியும், மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்த னர். பெருமாளின் நித்திரை கலைந்துவிடுமே என்ற கவலையில் அவரை எழுப்பா மல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயை கக்கினார். பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஓடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ? என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை, பெருமாள் தான் துயில்கையில் அரக்கர் கள் செய்த வன்கொடுமையினை தடுக்க எடுத்த வீரச் செயல்களை மெச்சிப்புகழ்ந்தார்.

திருமயம் கோவிலின் பெருமை பிரமாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. சிவபெருமானே நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், சத்திய தேவதையும் தர்மதே வதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது.

சத்ய புஷ்கரணி அனைத் துப்பாவங்களையும் போக்கும் சக்தி வாய்ந்த திருக்குளமாக கூறப்படுகிறது. உஜ்ஜீவனத் தாயாருக்கு திருமஞ்சனம், புடவை சாத்துதல், வளையல், பொம்மை ஆகியவற்றை உபயம் அளித்தல், பெரு மாளுக்கு வெண்ணெய் பூசுதல், தூய உலர்ந்த ஆடை சாற்றுதல் ஆகியவை நேர்த்திக் கடனாக செலுத்தப்படுகிறது.

இக்கோவிலில் புரட்டாசி மாதம் எப்போதும் போல் சுவாமி- அம்பாளுக்கு வழிபாடு நடத்தப்படு கிறது. மற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இக்கோவிலில் வைகாசி மற்றும் ஆடிப்பூர தேரோட்டம் மட்டுமே வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை நடைபெறும் வழிபாட்டில் மட்டும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அன்றைய தினமும் எப்போதும் போல் சுவாமி- அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

அசுரர்களை கொன்ற ஆதிஷேசன்


இக்கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுமலைக்கோட்டையாக குன்றின் தெற்குப் பக்கம் உள்ளது. இது ஒரு குடவரைக் கோவில் கோவிலைச் சுற்றி ஏழு சுற்று மதில்கள் உண்டு. வட்ட வடிவமான கோட்டைக்குள் இந்தக் கோவில் இருந்தாலும் வடக்கு, தெற்கு, தென் கிழக்கு ஆகிய மூன்று நுழைவு வாயில்கள் உள்ளன. மூலவர் ஸத்யகிரிநாதன், நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.

உற்சவர் பெயர் மெய்யப்பன் உய்யவந்த நாச்சியார் தாயாராக எழுந்தருளியிருக்கிறார். இந்தக் குடவரைக் கோவிற் சுவரில் பல சிற்பங்கள், கொள்ளை அழகுடன் செதுக்கப்பட்டிருக்கின்றன. திருவரங்கனை விட பெரிய திருமேனியோடு, பெருமாள் சயனித்திருக்கும் கோலத்தையும் பிரம்மா முதலிய தேவர்களின் உருவங்களையும் இங்குக் காணலாம்.பெருமாளுக்கு ஊறு செய்ய வந்த அசுரர்களை ஆதிஷேசன் விஷக்காற்றை விட்டு அவர்களைக் கொன்றதாக தலபுராணம் கூறுகிறது.

இரண்டாவது சந்நிதியில் பெருமாள் மலையோடு சேர்ந்து அனந்த சயனமூர்த்தியாகப் பாறையிலேயே வடிக்கப்பட்டிருக்கிறார். பெருமாள் ஆதிசேடன் மீது சயனம் கொண்டு கருடன் சித்திர குப்தன், மார்க்கண்டேயன், பிரமன், தேவர்கள், முனிவர்கள், கின்னாரர்கள் விளங்க, மதுகைடபர் அசுரர்கள், காலடியில் பூமிதேவி திருமார்பில் சீதேவி விளங்கக்காட்சி தருகிறார். இது திருவரங்கம் அரங்கநாதரை விடப் பெரிய திருமேனியாகும்.மற்றும் சக்கரத்தாழ்வார், ஆண்டாள், கிருஷ்ணர், லட்சுமி, நரசிம்மர் ஆகிய சந்நிதிகளும் உள்ளன.ஆதிசேஷன் இத்தலத்தைக் காத்துக் கொண்டுள்ளதாக ஐதீகம்.

ஆதிசேடன், சந்திரன், சத்தியமூனிவர், புரூரவ சக்கரவர்த்தி ஆகியோர் பெருமாளை வழிபட்டுப் பேறு பெற்ற பதி.கருடன் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை வழிபட்டுப் போற்றலைப் பெற்றார்.

திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற தலம். ராகு கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் கொடியவர்களால் அன்றாடம் துன்பப்படுகிறவர்கள் விஷ வியாதிகளால் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்கள். போட்டி- பொறாமை போன்ற துஷ்டத்தால் நொந்து போய் கொண்டிருக்கிறவர்கள் அனைவரும் இந்த சத்தியகிரி நாதப் பெருமாளையும் ஆதிசேஷனையும் வழிபட்டு செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் பரிகாரங்களைச் செய்தால் கிரகணம் நீங்கியது போல் மலர்ந்த முகத்தோடு பெருவாழ்வு பெறுவார்கள்.
Tags:    

Similar News