ஆட்டோமொபைல்
மஹிந்திரா கார்

இப்போ வாங்கிக்கோங்க, காசு அப்புறம் கொடுங்க - மஹிந்திரா அசத்தல் அறிவிப்பு

Published On 2021-06-03 09:28 GMT   |   Update On 2021-06-03 09:28 GMT
மஹிந்திரா நிறுவனம் புதிய கார் வாங்குவோருக்கு அசத்தலான சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஆட்டோமொபைல் துறையில் சரிந்த வாகன விற்பனையை வேகப்படுத்தி மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை புதிய கார் வாங்குவோரை கவரும் வகையில் உள்ளது.

மஹிந்திரா வாகனங்கள் விலையை குறைப்பது மட்டுமின்றி வாகனம் வாங்கும் அனுபவத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் வகையில் இருக்கிறது. புது சலுகைகளில்  'Own Now and Pay after 90 days' சலுகையும் ஒன்று. இது மஹிந்திராவின் பல்வேறு மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது. 



இதில் வாடிக்கையாளர்கள் மஹிந்திராவின் எந்த மாடலையும்  மாத தவணையில் வாங்கிக் கொண்டு அதற்கான தவணையை 90 நாட்களுக்கு பின் செலுத்த துவங்கலாம். இந்த சலுகை கொரோனா காலக்கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

புது மஹிந்திரா கார் வாங்குவோர் முடிந்தால் அவர்களின் அருகாமையில் உள்ள விற்பனை மையங்களுக்கு நேரடியாக சென்றும், ஆன்லைன் தளம் மூலமாகவும் புது கார் வாங்கலாம்.
Tags:    

Similar News