செய்திகள்
தற்கொலை

ராணிப்பேட்டையில் இளம்பெண்-தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Published On 2019-11-04 17:17 GMT   |   Update On 2019-11-04 17:17 GMT
ராணிப்பேட்டையில் பல்வேறு சம்பவங்களில் இளம்பெண் மற்றும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
வாலாஜா:

ராணிப்பேட்டை காரை தர்கா தெருவை சேர்ந்தவர் கலீல்பாஷா (வயது 44). தொழிலாளி. அடிக்கடி உடல் நலம் பாதிக்கபட்டதால் மனம் உடைந்து காணப்பட்டார்.

நேற்று வீட்டில் கலீல்பாஷா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை போலீசார் உடலை கைபற்றி விசாரணை நடத்தினர்.

ராணிப்பேட்டை பிங்கி எல்.ஏப். ரோடு பகுதியை சேர்ந்தவர் வினோஆனந்த். இவரது மனைவி அனுஷா (36). கணவன் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அனுஷா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை போலீசார் உடலை கைபற்றி பிரே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தெடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.         
Tags:    

Similar News