வழிபாடு
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் திருவிளக்கு பூஜை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் திருவிளக்கு பூஜை

Published On 2022-04-09 06:15 GMT   |   Update On 2022-04-09 06:15 GMT
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள மண்டப வளாகத்தில் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள மண்டப வளாகத்தில் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தனர்.

பின்னர் உலக நன்மை வேண்டியும், குடும்ப பிரச்சினை இன்றி அனைவரும் நலமாக வாழ வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் கொரோனா நோய் தொற்றிலிருந்து அனைவரும் விடுபட வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டது. முடிவில் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றவர்களுக்கு மங்கள பொருட்களும், திருவிளக்கு பூஜை புத்தகமும் தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News