செய்திகள்
அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு கொரோனா

Published On 2021-04-29 06:24 GMT   |   Update On 2021-04-29 06:24 GMT
ராஜஸ்தான் முதல்மந்திரி அசோக் கெலாட்டின் மனைவி சுனிதா கெலாட்டிற்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி அசோக் கெலாட். அவரது மனைவி சுனிதா கெலாட்டுக்கு நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அசோக் கெலாட் தெரிவித்தார்.

அதோடு அவர் தான் தனிமையில் இருப்பதாகவும் கூறி இருந்தார்.

இந்தநிலையில் 69 வயதான அசோக் கெலாட்டுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-


கொரோனா பரிசோதனைக்கான அறிக்கை இன்று எனக்கு கிடைத்தது. அப்போது எனக்கு கொரோனா இருப்பதற்கான பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. ஆனால் எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. நான் நன்றாகவே இருக்கிறேன்.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வீட்டில் இருந்து தொடர்ந்து தனிமையில் பணியாற்றி வருகிறேன்.

இவ்வாறு அசோக் கெலாட் கூறி உள்ளார்.

Tags:    

Similar News